Sunday, May 6, 2012

சத்யமேவ ஜெயதே - நிஜ ஹீரோ

சத்யமேவ ஜெயதே - நிஜ ஹீரோ 

கோடிகளை கொட்டி கொடுக்கிறேன் என்று சிறு பிள்ளை தனமான கேள்விகளை கேட்டு மக்களை முட்டாளக்கி பணம் சம்பாதிக்கும் தொலைக்காட்சி  நிகழ்ச்சிக்கு மத்தியில், நம்மால் இந்த சமூகத்திற்கு பயனுள்ள விதத்தில்  என்ன செய்ய முடியும் என்று களம் இறங்கியிருக்கிறது  ஒரு குழு. சும்மா நாற்காலியில் உக்கார்ந்து கொண்டு கேள்வி கேட்கிறேன் என்று அலட்டிக்கொண்டு பல கொடிகளை பெற்ற கான் நடிகர் இருக்கும் அதே துறையில் சமூகத்தில் நம் கண் முன்னே அரங்கேறும், நாம் கண்டு கொள்ளாமல் விட்ட அவலங்களை  ஆராய்ந்து  நமக்கு புள்ளி விவரங்களுடன், ஆதாரத்துடன் விளக்கி அதற்கு தீர்வு காண வலி சொல்லும் ஒரு தேடல் தான் இந்த சத்யமேவ ஜெயதே என்ற நிகழ்ச்சி. 


ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும்  கலை 11.00 மணிக்கு அனைவரும் பார்க்கும் வண்ணம் எல்லா மொழிகளிலும் மொழிபெயர்கப்பட்டு ஒளிபரப்பாகிறது இந்த நிகழ்ச்சி. (தூர் தர்ஷன் முதற்கொண்டு) 

ஸ்டார் பிளஸ் மற்றும் தூர் தர்ஷன் சேனலில் ஹிந்தியிலும் ஸ்டார் விஜயில் தமிழிலும் காணலாம்.

இப்படி ஒரு  உன்னதமான முயற்சியில் இறங்கியிருக்கும் ஆமிர் கானுக்கும் அவரது டீமுக்கும் முதலில்   HATS OFF.  

முதல் வாரமான இன்று இந்த நிகழ்ச்சியின் நோக்கத்தை விளக்கிய ஆமிர் கான் பிறகு எடுத்து கொண்ட தலைப்பு பெண் சிசு கொலை . நம் நாட்டில் நடந்து கொண்டு இருக்கும் நினைத்து பார்க்க முடியாத கொடுரங்களைசில கொடூரங்களை எடுத்து காட்டியவர் சில அதிர்ச்சி தகவல்களை தந்தார். உதாரணத்திற்கு  பெண் சிசு கொலை எல்லாம் கிராமத்தில் தான் நடக்கும் என்று நினைத்த என் போன்ற பலருக்கு தந்த அதிர்ச்சி தகவல். படித்த சில முட்டாள்கள் தான் இது  போன்ற அற்ப அறிவுடன் ஈனத்தமான காரியங்களில் ஈடுபடுகிறார்கள் என்பது. இதில் டாக்டர், IAS அதிகாரிகள் கூட இருக்கின்றனர் என்பது தான் வேதனை.

 இது  என்ன பெரிய செயல் ? ஆமிர் காணும் பல கோடிகள் வங்கி கொண்ட தான் இந்த நிகழ்ச்சியை செய்கிறார் என்று சொல்பவர்களுக்கு .
அவர் நினைத்தால் சும்மா வந்து ஒரு கேம் ஷோ செய்து விட்டு அதே கோடிகளை பெற்றிருக்க முடியும். இருந்தாலும் ஒரு மனிதனாக அன்றாடம் நாம் பார்க்கும் சில சமுக அவலங்களை பல இடங்களுக்கு சென்று பல்வேறு  மனிதர்களை சந்தித்து சமூக அக்கறையுடன் அவற்றை களைய இவர் தொடங்கியுள்ள ஒரு முயற்சி கண்டிப்பாக வரவேற்க வேண்டிய ஒன்றே ஆகும் . 13 வார நிகழ்ச்சியை தயாரிக்க இவர்கள் உழைத்த நேரம் கிட்டத்தட்ட இரண்டு வருடம்.

அரசியல்வாதிகள் பணம் பதுக்கும் சுயநலவாதிகளாக மட்டுமே ஆகி விட்ட இந்த காலத்தில் , அவர்கள் செய்ய வேண்டிய ஒரு காரியத்தை துணிந்து ஆரம்பித்த ஆமிர் கான் என் நெஞ்சில் சிம்மாசனமிட்டு ஒரு உயர்ந்த இடத்தில் அமர்ந்து விட்டார் ஒரு நிஜ ஹீரோவாக.

இவர்களின் இந்த முயற்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

பார்க்க தவறிய நண்பர்களுக்காக இந்த வார நிகழ்ச்சி:

ஹிந்தி Version 



தமிழ் Version 

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=R9RVyV93JSw
 

1 comment:

Post a Comment

படித்தது பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் தங்கள் கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள இங்கே பதிவு செய்யவும்.என் எழுத்துக்களை நான் மெருகேற்றிக்கொள்ள உதவும்.மேலும் எழுத எனக்கு உற்சாகம் அளிக்கும்.