Saturday, November 28, 2009

யோகி - விமர்சனம்

யோகி - விமர்சனம் 

நீங்கள் மென்மையான மனதுடையவராக இருந்தால் தயவு செய்து இந்த படத்தை தவிர்ப்பது நல்லது .படம் முழுக்க கொடூரம் தலை விரித்தாடுகிறது.

பிஞ்சு குழந்தையை கையில் வைத்து இருக்கும் சிறுவனை அவன் தந்தை எட்டி உதைப்பதால் அந்த குழந்தை இறந்து போவது . அந்த கணவனின் தொல்லை தாங்க முடியாமல் அந்த சிறுவனின் தாய்  தற்கொலை செய்து கொள்வது இது போன்ற கொடுமைகளை அனுபவித்து அதனால் பணத்திற்காக எதுவும் செய்யும் அந்த சிறுவன் தான் படத்தின் நாயகன் அமீர் . கழுத்தை அறுத்து கொலை செய்வது போன்ற காட்சிகள் என்று  வன்முறையின் உச்ச கட்டமாக இருக்கிறது  இந்த படம் .

இவ்வாறு அவன் திருடும் ஒரு காரில் அவனுக்கு கிடைக்கும் குழந்தைக்கும் அவனுக்கும் ஏற்படும் உறவு தான் மீதி கதை . அந்த குழந்தையை கொல்ல அதன் தந்தை (initial பிரச்சனை வந்துர கூடாதுன்னு அப்பா ஆனவர் ) முயற்சி செய்ய அதனை அமீர் எப்படி காப்பதுகிறார் என்று படமாக்கி உள்ளனர் . மிக சில காட்சிகள் மனதை தொடும் படியாக இருந்தாலும் மொத்தத்தில் பெரிய சொதப்பல் .

படத்தில் சொல்லி கொள்ளும் படியாக இருக்கும் ஒரே விஷயம் பின்னணி இசை . பாடல்கள் பெரிய அளவில் ஒன்றும் இல்லை என்றாலும் பின்னணி இசையில் பின்னி எடுத்திருக்கிறார் யுவன் ஷங்கர் ராஜா . முக்கியமாக அமீர் அந்த காரில் இருந்து குழந்தையை எடுத்து செல்லும் கட்சி மற்றும் சண்டை காட்சிகளில். இன்னொன்று cinematography. அற்புதமாக படமாக்கி இருக்கிறார்கள் .

யோகி இன்னொரு மொழி படத்தின் scene-by-scene copy வேறாம் . அதை கூட சரியாக செய்ய வில்லை என்றே சொல்ல வேண்டும் .இது போன்ற கதைகள் நிறைய பார்த்து சலித்து போனதால் இந்த படத்தை பற்றி சொல்ல வேறேதும் இல்லை.

தமிழில் நல்ல இயக்குனர்கள் நல்ல தரமான படத்தை கொடுத்தவர்கள் hero ஆகும் முயற்சியில் தாங்கள் பெற்ற நல்ல பெயரை கெடுத்து கொள்கிறார்கள் என்பதற்கு சேரன் , எஸ் ஜே சூர்யா வரிசையில் அமீர் சேர்ந்து விடுவார் என்று தோன்றுகிறது .இதில் குறிப்பாக எஸ் ஜே சூர்யாவை  இயக்குனராக பார்க்கவே ஆசைபடுகிறேன் . அவரை போன்று படத்தின் கதையை முன் கூட்டியே சொல்லியும் படத்தை ஹிட் ஆகும் தைரியம் உடையவர்கள் மிகவும் அபூர்வம் . படத்தின் திரை கதையில் தொய்வில்லாமல் ரசிக்கும் படியாக தருவது இவரின் மிக பெரிய பலம் .ஆனால் அவர் அநியாயமாக hero ஆகி வியாபாரி , திருமகன் என்று கொலையாய்  கொள்கிறார் இப்போது . அதே நிலைக்கு அமீரும் வந்து விடக்கூடாது என்பதே நம் ஆசை .

 

Sunday, November 22, 2009

Expected movies in December

Waiting for two good movies to finish this year in a good note.

1. Paa - with the combined excellence of Maestro Ilayaraja, P C Sreeram, Balki and ofcourse the evergreen Amitabh ji .


2. 3 Idiots - The ever reliable Aamir khan joining hands with Raj Kumar Hirani (Director of Munnabhai series) which is based on the famous Book by Chetan Bhagat.

பழசி ராஜா - திரை விமர்சனம்

தரமான திரைப்படங்களுக்கு ஒரு காலத்தில் பெயர் போன, ஆனால் இப்போது அரிதாகி போன  மலையாளத் திரை படைத்துறை தந்திருக்கும் ஒரு தரமான படைப்பு இந்த பழசி ராஜா . தமிழில் டப்பிங் செய்து வெளியிட்டு இருக்கிறார்கள்.


பழசி கேரள வர்மா ஆங்கிலேயர்களை எதிர்ப்பு போராட்டத்தை முதலிலேயே துவக்கியைதையும் அவர் போராடிய விதத்தையும் மிக நேர்த்தியாக படமாக்கியிருக்கிறார்கள். பழசி ராஜாவை பற்றி நம் மக்களுக்கு அதிகம் தெரியாததால் தெரிந்து கொள்ள இந்த திரைப்படம் உதவுகிறது.

மம்முட்டி பழசி ராஜாவாகவே வாழ்ந்திருக்கிறார். தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் மனதில் நிற்கிறார் .அவரது படை தளபதி கதாபாத்திரத்தில் சரத்குமார் தனது பணியை செவ்வனே செய்திருக்கிறார் .இவரின் உடல் இந்த வேடத்திற்கு பெரிய பலம் . படத்தில் குறிப்பிட வேண்டிய இன்னும் இரண்டு பேர் மனோஜ் கே ஜெயன் மற்றும் அவர் துணைவியாக வரும் பத்மப்ரியா . இவர்கள் இருவரும் மலை வாழ் மக்களுக்கு தலைமை தாங்கி போர் புரிபவர்கள் . பத்மப்ரியா இப்படி கூட நடிப்பார் என்று இந்த படம் பார்த்த பின் தான் தெரிந்து கொண்டேன் . படத்தின் இன்னொரு கதாநாயகி கன்னிகா. படம் முழுவதும் அழுது கொண்டே இருக்கிறார் . மற்றபடி சொல்வதற்கு ஏதும்  இல்லை .

படத்தை மலையாளத்தில் பார்த்தால் கூட கதையை நமக்கு புரிய வைத்து விடும் நமது இசை ஞானியின் பின்னணி இசை . பெரிய இசை ராஜாங்கமே நடத்தி இருக்கிறார் இந்த இசை மேதை . பின்னணி இசை என்றால் அது இளைய ராஜா தான் என்று ஆணித்தனமாக நிரூபித்திருக்கிறார். காடுகளில் நடக்கும் போர் காட்சி , ஆங்கிலேயர் இடத்தில நடக்கும் காட்சி , மலை வாழ் மக்கள் ஒளிந்திருந்து பறவை போல் ஒழி எழுப்பி தாக்குவதாகட்டும் அனைத்திலும் இயற்கையான தத்ருபமான இசையினால் மிரட்டியிருக்கிறார் நம் மேஸ்ட்ரோ. உதாரணமாக ஆங்கிலேய கவர்னர் டங்கன் உடன் பழசி ராஜாவாகிய மம்முட்டி சமாதானம் பேச வரும் காட்சியில் இரண்டு ஆங்கிலேயர்களில் ஒருவர்  பழசி ராஜா தனியாக வந்திருக்கிறார் அவரை கைது செய்து விடலாம் என்பார் . அப்போது இன்னொருவர் கோட்டைக்கு வெளியே நிற்கும் பழசி ராஜாவின் படையை அவருக்கு கட்டும் காட்சியில் தனது இசையின் மூலம் அந்த ஆங்கிலேயர்க்கு ஏற்படும் பயத்தை உணர்த்தியிருப்பார். அந்த காட்சி சொல்லி புரிய வைக்க முடியாது இசையுடன் பார்த்தால் தான் புரியும் இளையராஜா அவர்களின் மகிமை.

 படத்தில் மிக பெரிய பலம் cinematography மற்றும் பின்னணி இசை. போர்க்காட்சிகளை தனது கேமரா மூலம் நம் கண் முன் நிறுத்துகிறார் கேமரா மேன் . படம் முழுவதும்  வித விதமான இசைக்கருவிகளை பயன்படுத்தி இருக்கிறார் இளையராஜா . படத்தில் இரண்டு பாடல்கள் . குன்றத்து கொன்றைக்கும் பாடல் சித்ரா அவர்களின் குரலில் தாலாட்டுகிறது என்றால் மது பாலகிருஷ்ணன் குரலில் வரும் ஆதி முதல் காலம் பூத்ததிங்கே  பாடல் நம்மை மிரள வைக்கிறது . இந்த படலை படமாக்கி இருக்கும் விதமும் படத்தில் இந்த பாடலை சேர்த்திருக்கும் இடமும் கன கச்சிதம்  (Perfect match).

இந்த கால கட்டத்தில் இப்படி ஒரு வரலாற்று கதையை படமாக எடுப்பதே ஒரு சவாலான விஷயம் . அதை நேர்த்தியாக எடுப்பதென்பது இன்னும் சவாலான ஒன்று . அதை முடிந்த வரை நன்றாக செய்திருப்பதற்காகவே இந்த படத்தையும் , இதன் இயக்குனரையும் பாராட்டலாம் .

இந்த வகை திரைப்படங்கள் நிறைய பார்த்து விட்டாலும் (mangal pandey , jodha akbar) இவர்களின் நல்ல முயற்சிக்காக இதையும் பார்க்கலாம்.

பழசி ராஜா - perfectness.

To feel the magic of Maestro, click the Pazhassi Raja trailor link below:





picrure courtesy : www.behindwoods.com
Trailor : www.youtube.com