Friday, June 17, 2011

அவன் இவன் - எனது பார்வையில்

எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர்களில் ஒருவரான பாலாவின் இயக்கத்தில் வந்துள்ள ஒரு multistarrer திரைப்படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்புடன் சென்றேன். ஆனால் முழு திருப்தி இல்லை என்று தான் சொல்ல வேண்டும். 
  வழக்கமாக பாலாவின் படத்தில் இருக்கும் ஒரு அழுத்தமான கதை இதில் மிஸ்ஸிங். கதை என்று சொல்லி கொள்ள பெரிதாக இல்லை. சூப்பர் சிங்கர் புகழ் அனந்துவின் இரண்டு மனைவியின் இரண்டு மகன்கள் (விஷால் மற்றும் ஆர்யா) ஊர் ஹைனஸ் gm குமாரின் வளர்ப்பு மகனாக வாழ்ந்து கொண்டிருக்கும் இவர்கள் வெளியே எப்போதும் சண்டை போட்டு கொண்டிருந்தாலும் உள்ளுக்குள் மிகுந்த பாசத்துடன் இருக்கும் இவர்களின் அன்றாட அட்டகாசம் தான் முதல் பாதி. இவர்கள் வாழ்கையில் ஏற்படும் ஒரு சின்ன திருப்பம் இரண்டாம் பாதி. 

முதல் பாதி போவதே தெரியாமல் ஜாலியாக போகிறது பெரிதாக கதை ஒன்றும் இல்லை என்றாலும். அதிலும் படம் ஆரம்ப கட்டத்தில் சும்மா குத்து குத்து என்று குத்தி எடுத்திருக்கிறார்கள். விசாலின் அறிமுகமே அட்டகாசமான குத்து அடுத்து ஆர்யா தன் பங்கிற்கு தன் அம்மாவுடன் போடும் குத்து என்று ஆரம்பித்து வேகமாக பொழுது போக்காக போகும் முதல் பாதி. இரண்டாம் பாதியில் தான் கதைக்குள் போக போகிறார் என்று பார்த்தால் ஏற்கனவே பார்த்த வழக்கமான பாலா பட கிளைமாக்ஸ்.

ஊர் highness ஆக GM குமாருக்கு தான் படத்தின் முக்கியமான கதாபாத்திரம். முதல் ஒன்றிரண்டு காட்சியிலேயே இவர் கதாபாத்திரம் எப்படி பட்டது என்பதை ஒட்டு மீசை வைத்து விடும் பெண்களிடம் இதை வெளியே சொல்லி விடாதீர்கள் என்பது போன்ற காட்சியின் மூலம் நமக்கு உணர்த்தி விடுகிறார் பாலா. இருந்தாலும் படத்தில் நடக்கும் அத்தனையும் இவரை மையமாகவே வைத்து நகர்வதன் மூலம் இவர் பாத்திரத்தின் பங்கு மிக முக்கியமானதாகி விடுகிறது. அவரும் தன் பங்கிற்கு கிடைத்த வாய்ப்பை முழுமையாக பயன் படுத்தி விட்டார். காமெடி ஆகட்டும் செண்டிமெண்ட் ஆகட்டும் நல்ல முதிர்ந்த பக்குவமான நடிப்பு. சொல்ல போனால் ஆடுகளம் படத்தில் ஜெயபாலன் (பேட்டைக்காரன்) கதாபாத்திரத்தை போன்ற ஒரு முக்கியமான ரோல்.

இந்த படம் ஒரே ஒரு ஆளுக்கு அடித்த jackpot என்றால் அது விஷால் தான் இவருக்கு இப்படி எல்லாம் கூட நடிக்க தெரியுமா என்று கேட்க தோன்றுகிறது. பிதாமகன், சேது விக்ரம் அளவிற்கு ஒரு கனமான கதாபாத்திரம் இல்லை என்றாலும் விஷால் அட்டகாசபடுத்தி இருக்கிறார். பல காட்சிகளில் அவர் டயலாக் டெலிவரி மற்றும் body language அருமை. முக்கியமாக ஒரு கலைஞனான இவர் இப்போது நவரசத்தை காட்டுவார் என்று அறிமுகம் செய்ததும் அவர் மேடையில் நடித்து காடும் காட்சி பின்னி பெடலெடுத்து விட்டார். சும்மா பத்து பேரை அடித்து விட்டு பஞ்ச் டயலாக் பேசியே பார்த்த விஷாலா இது என்று வியப்பு. சரியான ஆள் கையில் கிடைத்தால் தான் கல் கூட சிற்பமாகும் என்று உணர முடிகிறது. 

 ஆர்யாவிற்கு விஷால் அளவிற்கு நடிக்கும் வாய்ப்பு இல்லை என்றாலும் படும் முழுக்க காமெடியில் கொடி கட்டி பறக்கிறார். வர வர அவரின் காமெடி timing  மற்றும் நடிப்பில் நல்ல spontaneity தெரிவது வரவேற்கத்தக்க முன்னேற்றம். முக்கியமாக இவர் தண்ணி அடித்து விட்டு விசாலின் நடிப்பை பார்த்து வியந்து பாராட்டும் காட்சி அதகளம். தமிழ் பேசும் இரண்டு கதாநாயகிகளை பயன்படுத்தி இருக்கும் பாலாவிற்கு அதற்காக ஒரு சபாஷ். இரண்டு பேரில் ஆர்யாவின் ஜோடியாக வரும் மது ஷாலினி கொஞ்சம் அழகு அதிகம் என்றாலும் வெறும் பொம்மை போல வந்து போகிறார் ஆனால் constable பேபியாக வரும் ஜனனி ஐயருக்கு கொஞ்சம் acting scope இருப்பதால் expressions மூலம் ஸ்கோர் செய்து விடுகிறார். 

சூர்யாவின் அகரம் foundation விழா காட்சியில் ஆர்யாவின் வசனம் மூலம் வரும் சராசரி மனிதனின் comments மற்றும் அதற்கு சூர்யாவின் பதில்கள் bala's touch. சில காட்சியே வந்தாலும் கொடூரத்தின் மையமாக வரும் வில்லன் ஆர் கேவிற்கு பெரிதாக வேலை இல்லை என்றாலும் பாலா மட்டுமே படைக்க கூடிய ஒரு ரோல். 

யுவனின் இசையில் பாடல்கள் ஏற்கனவே ஹிட் என்றாலும் முக்கியமான இரண்டு நல்ல பாடல்களை (ஒரு மலை ஓரம் என்ற மெலடி மற்றும் அவன பத்தி நான் பாட போறேன் என்ற குத்து பட்டு )படத்தில் use செய்யாதது ஏமாற்றம்.

படத்தின் கடைசி இருபது நிமிடங்கள் பிதாமகன் படத்தின் காட்சிகளை கொஞ்சம் மாற்றி ரீமேக் செய்தது என்று பாமர ரசிகன் கூட உணர முடியும். வழக்கமாக படத்திற்கு படம் வித்தியாசமான கதைக்களனில் பயணம் செய்து மற்ற இயக்குனர்களில்  இருந்து தனித்து விலகி நிற்கும் பாலா இந்த படத்தில் தனது சுயத்தில் இருந்தே விலகி நிற்பது போன்ற ஒரு உணர்வு. எப்போதும் சந்தோசமான முடிவு என் படத்தில் இருப்பதில்லை என்ற குறை அதிகம் பேர் கூறியதால் அவன் இவன் அப்படி இருக்காது என்று பாலா ஒரு முறை கூறியதாக ஞாபகம். ஆனால் அவரே நினைத்தால் கூட அதை மாற்ற முடியாது என்று நினைக்கிறேன். என்ன இந்த படத்தில் heroes சாக வில்லை ஆனால் முக்கிய கதாபாத்திரத்தை கொடூரமாக கொன்று அதே தாக்கத்தை கொண்டு வந்து விட்டார். 

படத்தின் பிளஸ் :
மிக வேகமாக நகரும் முதல் பாதி 
வித்தியாசமான விஷால்  
முதல் பாதி நகைச்சுவை 

குறை :

வழக்கமான பாலாவின் வித்தியாசமான சிந்தனை மற்றும் திரைக்கதை இல்லாமல் எளிதாக யூகிக்க முடியும் வழக்கமான காட்சிகள் .

பிதாமகன் கிளைமாக்ஸ் repeat.

மொத்தத்தில் நேரத்தை செலவு செய்ய விரும்புபவர்கள் கண்டிப்பாக பார்க்கலாம். நல்ல timepass. ஆனால் பாலாவின் standards விரும்பி சென்றால் கொஞ்சம் ஏமாற்றம் மிஞ்சும். யானைக்கும் கொஞ்சம் அடி சறுக்கத்தான் செய்யும் போல ...

அவன் இவன் படம் முடியும் போது ஒரே கேள்வி தான் தோன்றுகிறது பாலாவை பற்றி : அவனா இவன் ? 

Saturday, February 12, 2011

பயணம் - எனது பார்வையில்

 பயணம்
  
அழகிய தீயே, மொழி, அபியும் நானும் போன்ற நல்ல படைப்புக்களை தந்த ராதா மோகன் - பிரகாஷ் ராஜ் கூட்டணியின் அடுத்த முயற்சி தான் இந்த பயணம். வழக்கமான ராதா மோகன் படம் என்றால் எந்த மன நிலையில் சென்றாலும் சந்தோசமாக திரும்பலாம். மேலும் குடும்பத்துடன் பார்க்க கூடிய ஒரு தரமான விரசம் இல்லாத ஒரு படமாக இருக்கும்.

தீவிரவாதிகளின் விமானக் கடத்தல், பயணிகள் மீட்கப்பட்டார்களா  இல்லையா அவர்களின் நிலை என்ன என்பது தான் இந்த படத்தின் கதைக்களம் என்றவுடன் ஒரு இறுக்கமான திரைக்கதையாக இருக்கும் என்று நினைத்து சென்றேன். ஆனால் ஏமாற்றம் தான் எனக்கு. இந்த மாதிரி ஒரு கதையில் கூட இவ்வளவு இயல்பான நகைச்சுவையை கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்து விட்டார் ராதா மோகன். அவர் பாணியில் spontaneous humour கலந்து ஒரு நல்ல  படமாக கொடுத்திருக்கிறார்.

 படத்தின் பெரிய பிளஸ் ஒவ்வொரு கதாபாத்திரமும் அதன் சரியான தேர்வும் தான் என்று சொல்லலாம். ஒவ்வொரு கதாபாத்திரமும் அழகு. விமான பயணிகலாகட்டும், pilot, தீவிரவாதிகள், NSG கமாண்டோவாக வரும் நாகர்ஜுனா என அனைத்தும் மிக சரியான தேர்வு.

குறிபிடத்தக்க கதாபாத்திரங்கள் :

1.  பிறக்க போகும் தனது பேரனை பார்பதற்காக பயணிக்கும் ஒரு ஐயங்கார் கணவன் மனைவி. இவர்கள் இடையில் நடக்கும் உரையாடல் அனைத்துமே மிகவும் ரசிக்க கூடியவை. நிஜ வாழ்க்கையில் கிடைக்கும் அருமையான யதார்த்த நகைச்சுவை, படம் முழுவதுமே ஆக்கிரமித்துள்ளது ராதா மோகனின் brilliance.

2.  " shining star " ஆக வரும் ப்ரித்விராஜ் மற்றும் அவரின் பக்கத்தில் அமர்ந்து பயணிக்கும் அவரது தீவிர ரசிகராக வருபவரும் செய்யும் காமெடிக்கு அரங்கமே அதிர்கிறது.

3 . கமாண்டோவாக வரும் நாகர்ஜுனா. தெலுங்கில் well established actor இந்த படத்திற்கு என்ன தேவையோ அதை மிக சரியான அளவில் செய்திருக்கிறார். தான் ஒரு director's actor என்பதை இன்னொரு முறை நிரூபித்து விட்டார். நீண்ட நாளுக்கு பிறகு அவர் நடிக்கும் நேரடி தமிழ் படம். But its worth the wait. மனுஷன் அநியாயத்துக்கு ஸ்மார்டா இருக்குறார். அவர் பையன் ஹீரோ ஆயாச்சு ஆனாலும் அவரை விட இவர் தான் இன்னும் smart  தோற்றத்திலும் நடிப்பிலும்.

4. தீவிரவாதியின் தலைவனை போலவே இருக்கும் character artist ரகு character மற்றும் சினிமா இயக்குனராக வரும் பிரம்மி (பிரம்மானந்தம்)  portion மனம் விட்டு  சிரிக்க வைக்கும் ரகம்.

5  சன் டிவி டீலா நோ டீலா program compering செய்யும் அந்த நடிகர் (பெயர் தெரியவில்லை) மற்றும் சனா கான் இடையில் நடக்கும் இயல்பான உரையாடல்கள் அவர்களுக்குள் பூக்கும் அழகான நட்பு. மற்றும் இவர்களுடன்  இருக்கும் retired colonel கதாபாத்திரத்தில் வரும் தலைவாசல் விஜயின் நேர்த்தியான நடிப்பு.சனா கான் சிலம்பாட்டத்தில் எனக்கு என்னவோ பிடிக்கவே இல்லை. இதில் கொஞ்சம் அழகாக கட்டி இருக்கிறார்கள்.  

6 ராதா மோகன் favourite actors
குமரவேல் கதாபாத்திரத்தின் மூலம் டைரக்டர் கூறும் communism கருத்துக்கள்.
பாதிரியார் கதாபாத்திரத்தில் வரும் M S பாஸ்கர் மூலம் கொடுத்திருக்கும் மனித நேய  கருத்துக்கள்.  

7 Air Hostess கதாபாத்திரத்தில் வரும் பூனம் கவுர் ஓரிரு காட்சிகளில் நன்றாக நடித்துள்ளார்.

8  படத்திற்கு தேவையான சில இடங்களில் மட்டுமே வந்தாலும்  ஒரு கட்டத்தில் தீவிரவாதிகளை எதிர்த்து ஏதும் செய்ய முடியாமல் தவிக்கும் இயலாமையை வெளிபடுத்தும் காட்சியை சர்வ சாதரணமாக ஊதி தள்ளி இருக்கிறார் பிரகாஷ் ராஜ்.

இன்னும் பல சொல்லி கொண்டே போகலாம் .........

படத்தின் பொருந்தாத அல்லது இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கலாமே என்று நினைக்க வைப்பவை . தீவிரவாதிகளாக வரும் பசங்க (இனிது இனிது படத்தில் அறிமுகம் செய்த பசங்க தான் ) கொஞ்சம் over acting செய்வது தான்.

தெலுங்கிலும் release செய்வதால் நாகர்ஜுனா image பாதிக்கப்பட கூடாது என்பதற்காக சேர்த்திருக்கும் kashmir தீவிரவாதி தலைவனை கைது செய்யும் காட்சிகள் கொஞ்சம் cinematic.

படத்திற்கு மேலும் பலம் சேர்த்த விஷயம் ஞானவேலின் sharp and intelligent வசனங்கள்.

உதாரணமாக சரியான  முடிவுகளை எடுக்க தெரியாமல் தவறான முடிவுகளையே எடுக்கும் ஒரு ஆபீசரிடம் நாகர்ஜுனா ஒரு காட்சியில் சொல்லும் இந்த வசனத்தை சொல்லலாம். "  You are old but not experienced " . shining star ப்ரித்விராஜ் சினிமாவில் பேசிய பஞ்ச் வசனங்கள் நினைத்து நினைத்து சிரிக்க வைக்கும் ரகம்.

பிரவீன் மணியின் பிண்ணனி இசை படத்திற்கு பெரிதாய் பலம் சேர்க்க வில்லை என்றாலும் கெடுக்கவில்லை. இவர் miss செய்ததை score செய்திருப்பவர்கள் cinematographer குகன் (முக்கியமாக கடைசி சில நிமிடங்களில் நம்மை படத்துடன் involve செய்ய வைப்பது இவர் தான் ) மற்றும் art director கதிர். படத்தில் வரும் திருப்தி ஏர்போர்ட் என்பதுஇவர்கள் சொல்லி தான் தெரியும். படம் பார்க்கும் போது அப்படி ஒரு உணர்வே இல்லை. 

ஒரே பாடல் அதுவும் டைட்டில் song. அதில் மதன் கார்கியின் வரிகள் அருமை. பயணம் பற்றிய கவிதை என்றே சொல்லலாம். மற்றபடி பாடல்கள் எதுவும் இல்லாமல் ஒரு இரண்டு மணி நேரம் நேரம் போவதே தெரியாமல் மனம் விட்டு சிரித்து மகிழ்ச்சியுடன் திரும்ப விரும்புபவர்கள் இந்த பயணத்தில் பங்கு கொள்ளலாம்.  

மொத்தத்தில் இந்த கூட்டணியுடனான பயணம் நமக்கு ஒரு இனிய பயணம் தான்.