Friday, April 9, 2010

மனதிற்கு இன்பம் தரும் இசை

பார்ப்பதற்கும், பின் அதை பற்றி எழுதுவதற்கும் நல்ல திரைப்படங்கள் எதுவும் வெளி  வராததால் (IPL புண்ணியத்தில்), (அங்காடி தெரு தவிர்த்து )என் மனதிற்கு பிடித்த ஆனால் மிகவும் பிரபலம் ஆகாத சில நல்ல பாடல்களை பற்றி உங்களிடம் பகிர்ந்து கொள்ளலாம் என்று முடிவெடுத்து இதோ ஆரம்பித்து விட்டேன் .

முதல் பாடல் : இள வேனிற்கால பஞ்சமி அவள் வானில் வந்த பௌர்ணமி 

பிரபு, மீனா நடித்த மனம் விரும்புதே உன்னை படத்தில் வரும் இந்த இனிய பாடல் என் "All time favourite" லிஸ்டில் ஒன்று . இசைஞானி இளையராஜாவின் அற்புதமான இசையில் பாடகர் ஹரிஹரன் மிகவும்  ரசித்து பாடியிருக்கும் ஒரு பாடல் இது . படம் ஒரு மகா மொக்க படம் என்பதால் கிடைக்க வேண்டிய உரிய அங்கீகாரம் இந்த பாட்டுக்கு கிடைக்காமல் போய்விட்டது என்றே  தோன்றுகிறது. ஒரு வேலை நல்ல படத்தில் வந்திருந்தால் இன்னும் அதிக பிரபலமாகியிருக்கும் இந்த பாடல். 


அம்மா இல்லாத ஒரு குழந்தையை வளர்க்கும் பிரபுவிடம் மீனா அதை பற்றி விசாரிக்கும் போது, அவர் தனது காதலியாக வாழ்வில் வந்து, பின் மனைவியாகவும், தாயாகவும் மாறி, பிறகு தன்னை விட்டு விட்டு இறந்து போன தனது மனைவியை பற்றி பாடுவதாக அமைந்த இந்த பாடலின் வரிகள் அனைத்தும் மிகவும் எழிமையாகவும் அதே சமயம் இசைக்கு ஏற்றார் போலவும் கவிதை நயத்துடனும் அமைந்தது இந்த பாடலின் இன்னொரு சிறப்பு.

"இள வேனிற்கால பஞ்சமி அவள் வானில் வந்த பௌர்ணமி சித்திர வானம் சித்திரம் தீட்டிடும் நேரம் ஒரு பத்தரை மாட்டு தங்க நிலாவை சந்தித்தேன்." என்று தொடங்கும் இந்த பாடலின் இசை மனதிற்கு இன்பம் தரும் வகையில் அமைந்திருக்கும். மேலும் இது போன்ற அற்புதமான வரிகளில் அமைந்திருக்கும்.

"தூக்கம் போனது அவளை நினைத்தே ஏக்கமானது பித்தனைப் போலானேன். பார்க்கும் இடமெல்லாம் அவளை போலே பாவை தெரிந்தது பைத்தியமாய் ஆனேன். என்னை போலே அவளும் இருந்தால் என்று அவள் சொல்ல கேட்டு அவள் சொல்லக் கேட்டு உள்ளம் எங்கோ போனது மீண்டும் மீண்டும் அவள் தான் வேண்டும் என்று என்னை  தூண்டும் உள்ளம் பச்சை கோடி காட்டுது. இது இன்று வந்த சொந்தமா இல்லை ஜென்ம ஜென்ம பந்தமா ? "

 தன்னை விட்டு பிரிந்து சென்றவள் விட்டு சென்ற சந்தோசமான நினைவுகளை நினைத்து நினைத்து ரசித்து பாடுவதாக அமைந்திருக்கும் இந்த பாடல் முடியும் வரிகள் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. திருமணம் ஆகி தனக்கு ஒரு துணையாக ஒரு குழந்தையை கொடுத்து விட்டு நினைவை விட்டு மட்டும் நீங்காமல் சென்றதை இப்படி எழுதியிருப்பார் கவிஞர்.

"மஞ்சள் குங்குமம் கொண்ட தேவதை எந்தன் நெஞ்சிலே மங்கள நாள் கொண்டால். திங்கள் ஆடிடும் வானம் போலவே எங்கள் வீட்டிலே மழலயைத்தான் தந்தாள். பாட வைத்து உள்ளம் ஆட வைத்து அன்பு பாட்டு சொல்லி வீட்டில் இன்பம் தந்தவள். தேட வைத்து நெஞ்சம் ஆட வைத்து என்னை சொகத்தீயில் வேக வைத்து போனவள். இந்த ஏழை என்னை மறந்தாள். எந்தன் ஜீவனுக்குள் கலந்தாள் "

இவ்வளவு பிடித்த ஒரு பாடலாக இருந்தாலும் இந்த பாடலை எழுதியவர் யார் என்று இன்னும் எனக்கு தெரியாது. தெரிந்தவர்கள் பகிர்ந்து விட்டு செல்லவும்.

குறிப்பு : இந்த பாடல் பார்ப்பதை விட கேட்பதற்கு தான் மிகவும் சிறந்த ஒன்று.

இதற்கு மேலும் இதை பற்றி பேசி உங்களை வெறுப்பேற்ற விரும்பவில்லை. கேட்டு பாருங்கள் நீங்களும் உணர்வீர்கள். இதோ பாடல் கேட்டு ரசிக்க :

http://musicmazaa.com/MMaPlayer/play/

பதிவிறக்கம் செய்ய :   http://w15.easy-share.com/8208221.html
 
பார்த்து ரசிக்க :