Friday, July 22, 2016

கபாலி என் பார்வையில்

கபாலி என் பார்வையில் 

முதலில் ரஞ்சித் அவர்களுக்கு வாழ்த்துக்கள்  சூப்பர் ஸ்டாருக்கென்று கதை செய்யாமல் தன் கதையில் அப்படியே அவரைப்  பொருத்தியதற்கு.



ரொம்ப நாள் ஆச்சு இப்படி ஒரு acting scope உள்ள கதையில் ரஜினியை பார்த்து. படத்தின் கதை ஒடுக்கப்பட்ட இனத்துக்காக போராட தலை தூக்கும் ஒரு தலைவன் (இங்கே மலேசியா டான்), அவரின் நட்பு, துரோகம், எதிர்ப்பு, அதனால் அவன் குடும்பத்தில் அவனுக்கு ஏற்படும் பாதிப்புகள் இவை தான்.



வழக்கமான ரஞ்சித் படங்கள் போல இதிலும் அனைத்து கதாபாத்திரத்திற்கும்  முக்கியத்துவம் கொடுத்து கதையை நகர்த்தி உள்ளார். படத்தில் எல்லாருக்கும் ஸ்கோப் மற்றும்  ஸ்கோர் செய்யும் வாய்ப்பு  வெவ்வேறு விதத்தில். மூன்று கதாநாயகிகளும் தன் பங்கை சிறப்பாக செய்துள்ளனர். ராதிகா ஆப்தே குமுதவல்லி பாத்திரத்தில் கன  கச்சிதம் என்றால் தன்ஷிகா இண்டெர்வல் பிளாக் சீன் சரவெடி. ரித்விகா படத்திற்கு படம் ஒரு படி மேலே போகிறார் இயற்கையான நடிப்பில். அப்புறம் அட்டகத்தி தினேஷ் செய்கைக்கு ஒவ்வொரு சீனிலும் தியேட்டர்  அதிருது. அவர் நிஜ வாழ்க்கையில் கூட இப்படி தான் துரு துருவென்று இருப்பார் என்று யாரோ பேட்டியில் சொல்லியதாக  ஞாபகம். அப்படியே கலை அரசன், ஜான் விஜய் character என சொல்லிக்கொண்டே போகலாம். அனைத்தும் perfect casting and execution.

படத்தின் சில முக்கிய செண்டிமெண்ட் காட்சிகளில் தலைவரின் நடிப்பு, மேனெரிசம், face expression பற்றி சொல்லியே ஆக வேண்டும்.. சான்சே இல்ல... என்னா மாதிரி நடிகன்யா இவரு..சில பழைய படங்களில் சில காட்சிகளில் இவர் கண் போதும், அதுவே பல கதைகள் பேசும். (உதாரணம் : தர்மதுரை). அந்த மாதிரி ஒரு ரஜினி திரும்ப வந்துட்டார்னு  சொல்லி கபாலி ல மறுபடியும் கூட்டிட்டு வந்துட்டார் ரஞ்சித். interval block முன் ஜான் விஜய் கபாலி கதையை சொல்லி முடித்த பின் கண்ணாடியைப் பார்த்து நின்று கொண்டிருக்கும் தலைவர், திரும்பி ஒரு நடை நடந்து விட்டு மகிழ்ச்சி என்று சொல்லும் காட்சி, அதே போல் மாய நதி இங்கு பாடல் முன்பு வரும் சில காட்சிகள் ரஜினி எனும் அற்புதமான கலைஞனை கண் முன்னே நிறுத்துகிறது.

வழக்கமான ரஜினி படத்தில் ஹீரோ வில்லன் கெமிஸ்ட்ரி பக்காவாக இருக்கும் உதாரணம் Baasha. ஆனால் இந்த படத்தில் என்னவோ அதைக் காட்டிலும் கபாலி குடும்ப கெமிஸ்ட்ரி அற்புதம். அது தான் ரஞ்சித் தேடி கொண்டு இருந்த இந்த ஸ்கிரிப்ட்டின் உயிர் நாடி என்று நினைக்கிறேன். திரையில் வரும் இந்த காட்சிகளில் தான் ரஜினி என்னும் அற்புதமான நடிகனை அணு அணுவாக ரசித்தேன். இந்த காட்சிகளில் பல பேர் கண்களில் பார்க்க முடிந்த ஆனந்த கண்ணீரே அதற்கு சாட்சி. இதை மறுப்பவர்கள் படம் பார்க்கும் போது கொஞ்சம் சுற்றி முற்றி பக்கத்தில் இருப்பவர்களை பாருங்கள். (குறிப்பு : இது தியேட்டரில் படம் பார்ப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும், திருட்டு vcd, அப்புறம் மொபைலில் எடுத்து நெட்டில் வெளியிடும் பிரிண்ட் பார்க்கும் திருடர்களுக்கு அல்ல)

படத்தில் குறிப்பிடும் படியான இன்னொன்று வசனம். ரொம்ப சிம்பிள் ஆன "மகிழ்ச்சி" ஆகட்டும் இல்ல புத்திசாலித்தனமான இது போன்ற வசனம் ஆகட்டும்

"என்ன கோட்டுக்கே எல்லாத்தையும் செலவு பண்ணுவ போல" என்று கேட்கும் நண்பனுக்கு    "காந்தி சட்டை போடாததுக்கும், அம்பேத்கர் கோட் போட்டதும் பின்னாடி நெறைய காரணம் இருக்கு நண்பா, அது அரசியல்.  இதுவும் ஒரு வகை எதிர்ப்பு தான் "   என்பது. இந்த வசனங்கள் எல்லாம் சூப்பர்ஸ்டார் ரஜினி என்ற மாமனிதனின் வாயில் இருந்து வரும் போது  இன்னும் பலம் பெறுகிறது. இது இப்படி என்றால் கபாலி குமுதவல்லி இடையில் பேசும் வசனங்கள் ரசிக்கும் படி உள்ள எதார்த்தம் மிக்கவை.


சந்தோஷ் நாராயணின் BGM படத்திற்கு பெரும் பலம். குமுதவல்லி காட்சிகளில் வரும் voilin மற்றும் மாய நதி இங்கே பாடல் மனதில் அழுத்தமாக பதிகிறது. பல பாடல்கள் முழுதாக வராமல் இடை இடையில் bgm ஆக வருகிறது. உச்ச கட்ட காட்சிகளில் நெருப்புடா பொறி பறக்கிறது.

மொத்தத்தில் ஒரு வித்தியாசமான தலைவர் படம், ஒரு பாஷா இல்லை வழக்கமான ரஜினி படம் இதை எதிர்பார்க்காமல் சென்றால்கு டும்பத்துடன் மனம் மகிழ்ந்து நெகிழ்ந்து பார்க்க கூடிய படம் தந்த கபாலி குழுவிற்கு வாழ்த்துக்கள். என்ன கொஞ்சம் பொறுமை வேண்டும் ரசித்து  பார்க்க . ஏன் என்றால் படத்தின் ஆரம்பம் கொஞ்சம் மெதுவாக செல்கிறது. அது தலைவர் intro, song, fight என ஆரம்பித்து கதைக்குள் செல்லும் வரை தான். அதன் பின்பு gripping screenplay நம்மை கதையுடனும் காரெக்டருடனும் நம்மை ஒன்றை செய்கிறது. ஆரம்பத்தில் சில காட்சிகள், கடைசி சண்டை காட்சியில் அப்புறம் இடை இடையில் கொஞ்சம் சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு தேவையான காட்சிகள் சேர்க்கப்பட்டாலும் தன் மூலக் கதையில் என்ன தான் சூப்பர் ஸ்டாரை வைத்து படம் செய்தாலும் கொஞ்சம் கூட compromise செய்யாமல் இருந்த ரஞ்சித்தின் உண்மைக்கும் தைரியத்திற்கும் கிடைத்த மகுடம் தான் இந்த கபாலி. பாலச்சந்தர் அவர்கள் எடுத்த பேட்டியில் ரஜினி அவர்கள் சொன்னது "தனக்கு வெறும் commercial படங்களை விட  மனதுக்கு பிடித்த நல்ல கதைகளில் நடிக்க ஆசை என்று." அந்த ஆசையை நிறைவேற்றியிருக்கும் ஒரு படமாக இந்த கபாலி இருக்கும்.


மற்றபடி ரஜினியை குறை கூறியே பிழைக்கும் சிலர் சொல்வது படத்தில் வழக்கமான ரஜினி பட commercial மசாலா இல்லை. ஏன்டா அவர் அப்படி படம் கொடுத்தால் , நல்ல படம் கொடுக்கவில்லை என்று சொல்கிறீர்கள். அவர் நல்ல படம் ஒன்றை கொடுத்தால் இப்படி சொல்லுங்கள்.

உங்களை மாதிரி ஆளுங்களுக்கு தான் படத்தில் தலைவர் சொல்லும் நண்டு கதை பொருந்தும். மற்றபடி உங்களுக்கு இந்த படம் பார்த்து ரசித்த நல்ல பட ரசிகர்கள் மற்றும் உண்மையான  தலைவர் ரசிகர்களின் பதில் " நாங்க நல்ல இருந்தா  உங்களுக்கு பிடிக்காதே ! நாங்க அப்படி தான்டானு  காலார  தூக்கி விட்டு, கால் மேல கால் போட்டு கிட்டு, கெத்தா இருப்போம்  உங்களால தாங்கிக்க முடியலேன்னா சாவுங்கடா "