Friday, October 2, 2009

திரு திரு துரு துரு திரைப்படம் - ஒரு கண்ணோட்டம் எனது பார்வையில்


வணக்கம் . இது எனது முதல் பதிவு .



சென்னையின் best multiplex theatre satyam முதன் முதலாக  தயாரித்து இருக்கும் திரைப்படம் திரு திரு துரு துரு.

முதலில் இது எந்த மாதிரியான audience பார்க்க வேண்டிய படம் .

மசாலா commercial படம் , thriller , action படங்களை விரும்புபவராக இருந்தால் தயவு செய்து இந்த படத்தை தவிர்ப்பது நல்லது .

இது ஒரு மென்மையான light hearted feel good shuttle comedy movie. பொய் சொல்ல போறோம்  வகை படம் உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த படம் கண்டிப்பாக பிடிக்கும் .


சரி படத்தின் கதைக்  களம் என்ன ?

மௌலியின் கம்பனியில் வேலை பார்க்கும் அவரது வளர்ப்பு மகனான நமது ஹீரோவின் அஜாக்ரதையினால் ஒரு பெரிய ப்ராஜெக்ட் கை நழுவி போக போகும் வேலையில் , அந்த  கம்பனியை தூக்கி நிறுத்த ஹீரோவும் , அதே கம்பனியில் வேலை பார்க்கும் ஹீரோயினும் போராடி வெற்றி பெரும் பழைய கதை தான் . இருந்தாலும் screenplay மிகவும் சாமர்த்தியமாக செய்திருப்பதால் ரொம்ப fresh ஆக இருக்கிறது . காமெடியை படத்தில் வேண்டுமென்றே திணிக்காமல் அன்றாட நிகழ்வுகளின் காமெடியை பதிவு செய்திருக்கிறார் முதல் பட டைரக்டர் J S நந்தினி  (இவர் கண்ட நாள் முதல் என்ற ஒரு அருமையான படத்தை தந்த பிரியாவின் assistant என்பது குறிப்பிடத்தக்கது ).

ஒரு குழந்தைக்கான விளம்பர படம் தயாரிக்க ஒரு நல்ல குழந்தையை தேடி போக அதனால் ஏற்படும் பிரச்சனை அதிலிருந்து எப்படி கதாநாயகனும் கதாநாயகியும் தப்பித்து வெற்றி பெறுகிறார்கள் என்பதை முழுக்க முழுக்க காமெடியாக செய்திருக்கிறார்கள் . அவர்களிடம் மாட்டும் அந்த குழந்தை கொள்ளை அழகு . பல இடங்களில் லாஜிக் மீறல்கள் இருந்தலும் படத்தின் freshness அதையும் மறந்து ரசிக்க வைக்கிறது .
வழக்கமான அடி தடி படங்களாக வந்து நம்மை சாகடிக்கும் வேளையில் இந்த மாதிரி  ஒரு படம் உண்மையில் வரவேற்கத்தக்கது. ஹீரோ அஜ்மல் - காமெடி இரண்டிற்கும் சம்பந்தமே இல்லை என்று நினைத்து தான் படத்திற்கு சென்றேன் . ஆனால் கொடுத்த வேலையை சிறப்பாகவே செய்திருக்கிறார் . கதாநாயகி ரூபா சில இடங்களில் over acting  என்றாலும் அனைவரும் தங்கள் கேரக்டரை நன்றாகவே செய்துள்ளனர் .

இந்த படத்தின் மிக பெரிய பிளஸ் இதன் டைரக்டர் என்றே சொல்ல வேண்டும் ரொம்ப வாய் விட்டு சிரிக்க வைக்கும் காமெடி இல்லை என்றாலும் ரசிக்கும்படியான நல்ல ஒரு  காமெடி படத்தை எந்த ஒரு vulgarity இல்லாமல் தந்ததற்காக . இன்னொன்று மௌலி . மௌலி ஒரு அற்புதமான நடிகர் என்பதை இன்னொரு முறை நிரூபித்துள்ளார் . அவரது டைலாக் டெலிவரி காமெடி டைமிங் பிரமாதம் . பிஸ்தா , பொய் சொல்ல போறோம் ஆகிய படங்களில் கூட மௌலியை நன்றாக பயன் படுத்தி இருப்பார்கள் . அந்த வரிசையில் இந்த படத்தையும் சேர்த்துக் கொள்ளலாம் . படத்தின் இசை மணி ஷர்மா . பாடல்கள் அனைத்தும் சுமார் ராகம் . சில்லென வீசும் பூங்காற்று எனும் மெலடி ரசிக்க முடிகிறது . திரு திரு துரு துரு தீம் music படத்தோடு பார்க்க நன்றாக உள்ளது .

மொத்தத்தில் இது குடும்பத்தோடு எந்த ஒரு நெருடலும் இல்லாமல் பார்க்க கூடிய ஒரு நல்ல படம் . சென்னை போன்ற இடங்களில் high class audience புண்ணியத்தில் நன்றாக ஓடும் . மற்ற ஊர்களில் B & C சென்டர்களில் response  பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் .

Thanks,

Cinema Addict (only good movies)

1 comment:

Post a Comment

படித்தது பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் தங்கள் கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள இங்கே பதிவு செய்யவும்.என் எழுத்துக்களை நான் மெருகேற்றிக்கொள்ள உதவும்.மேலும் எழுத எனக்கு உற்சாகம் அளிக்கும்.