crazy மோகன் கதை வசனத்தில் மதுமிதாவின் இயக்கத்தில் ஏகப்பட்ட நடிகர்கள் பட்டாளத்தில் வந்திருக்கும் படம். இந்த படத்திற்கு போவதற்கு என்னை தூண்டிய ஒரே காரணம் crazy மோகன் தான்.
ஜமீன் பரம்பரைக்கு சொந்தமான சில வைரங்கள் பத்திரமாக மறைத்து வைக்கப்பட அதை தேடி அலையும் அந்த பரம்பரையில் வந்த ஆனந்தராஜ், மற்றும் பிறவி திருடர்களான ஹீரோ கார்த்திக்கும் ஹீரோயின் ஷிகாவும் இன்னும் இவர்களது எடுப்புகளும், இவர்களை சுற்றும் police inspector ஜெயராமும் என்ன ஆனார்கள் என்பது தான் கதை.
என்ன தான் சில இடங்களில் மொக்கை காமெடியாக இருந்தாலும் படம் முழுக்க சிரித்து ரசிக்கலாம் லாஜிக் எல்லாம் மறந்தால். அக்மார்க் crazy மோகன் வசனங்கள் இதிலும் எந்த குறையும் இல்லை. படத்தில் நிறைய நடிகர்கள் வந்தாலும் அனைவருமே காமெடியில் கலக்கி இருக்கிறார்கள். குறிப்பாக காமெடி timing பக்காவாக வரும் நடிகர்களான ஆனந்தராஜ், ஜெயராம், வாசு, டெல்லி கணேஷ், M.S. பாஸ்கர் ஆகியவர்கள் நல்ல கதாபாத்திர தேர்வு. ஆனந்தராஜ் போன்ற நடிகர்களை இன்னும் பயன்படுத்தலாம் நல்ல கதாபாத்திரங்கள் இருந்தால் என்று தோன்றுகிறது . மேலும் சில சின்ன சின்ன கதாபாத்திரங்கள் ரசிக்கும் படியாக இருந்தது. காதல் தாதாவாக சில நேரங்கள் வந்தாலும் நன்றாக செய்திருக்கிறார் ராதாரவி. ஹீரோயினுக்கும் ஹீரோவுக்கும் கிட்ட தட்ட சமமான வேடம். இயக்குனர் பெண்ணாக இருந்ததால் இந்த சம அந்தஸ்து தமிழ் படத்தில் அபூர்வமாக கிடைத்து விட்டது என்று நினைக்கிறேன். கார்த்திக் சில இடங்களில் சொதப்பினாலும் மொத்தத்தில் நன்றாகவே செய்திருக்கிறார்.

படத்தில் கொஞ்சம் கூட சகிக்க முடியாத ஒரு விஷயம் பாடல்கள். பிண்ணனி இசையும் சொல்லிகொள்ளும் படியாக இல்லை. இசை வெண்ணிலா கபடி குழு படத்தின் இசை அமைப்பாளர் கணேஷ். அந்த படத்தில் அருமையான இரண்டு பாடல்களை கொடுத்தவர் இதில் என்னவோ ஏமாற்றி விட்டார். better luck next time.
மொத்தத்தில் ஒரு திரைப்படம் போல் இல்லாமல் ஒரு நல்ல crazy மோகன் drama பார்க்க விரும்புபவர்கள் இந்த படத்தை பார்க்கலாம். சுறா, எறா போன்றவைகளால் சாவதற்கு பதில் இது போன்ற படங்களை பார்க்கலாம்.
கொல கொலயா முந்திரிக்கா - just time pass with some healthy dialogue comedies from good performers.
4 comments:
இப்போதாங்க நானும் படம் பார்த்துவிட்டு வந்து, படத்தை பற்றி எழுதினேன்.. :)
http://msk-cinema.blogspot.com/2010/05/blog-post_22.html
சொல்லி ..........கொள்ளும் படிyaaga irukiratha
சொல்லி ..........கொள்ளும் படிyaaga irukiratha
சொல்லி ..........கொள்ளும் படிyaaga irukiratha
Post a Comment
படித்தது பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் தங்கள் கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள இங்கே பதிவு செய்யவும்.என் எழுத்துக்களை நான் மெருகேற்றிக்கொள்ள உதவும்.மேலும் எழுத எனக்கு உற்சாகம் அளிக்கும்.